Newsயாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை - இலங்கை ஜனாதிபதி...

யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

-

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரையில் 5 மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 16,688 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சுயேட்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச 93,482 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், 84,558 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் 645 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அதேநேரம் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

வன்னியில் சஜித் பிரேமதாச மொத்தமாக 95,422 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

52,573 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டாம் இடத்திலும், 36,377 வாக்குகளைப் பெற்றுள்ள பி. அரியநேரத்திரன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

வன்னியில் அனுரகுமார திஸாநாயக்க 21,412 வாக்குகளையும், நாமல் ராஜபக்ச 1,079 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

காலி மாவட்டத்தின் முழுமையான வாக்கு முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதன்படி காலி மாவட்டத்தில் 3 இலட்சத்து 66,721 வாக்குகளைப் பெற்று அனுரகுமார திஸாநாயக்க அங்கு முன்னிலை வகிக்கிறார்.

சஜித் பிரேமதாச காலியில் 1 இலட்சத்து 89, 555 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க ஒரு இலட்சத்து 7,336 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...