Newsயாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை - இலங்கை ஜனாதிபதி...

யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

-

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரையில் 5 மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 16,688 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சுயேட்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச 93,482 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், 84,558 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் 645 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அதேநேரம் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

வன்னியில் சஜித் பிரேமதாச மொத்தமாக 95,422 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

52,573 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டாம் இடத்திலும், 36,377 வாக்குகளைப் பெற்றுள்ள பி. அரியநேரத்திரன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

வன்னியில் அனுரகுமார திஸாநாயக்க 21,412 வாக்குகளையும், நாமல் ராஜபக்ச 1,079 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

காலி மாவட்டத்தின் முழுமையான வாக்கு முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதன்படி காலி மாவட்டத்தில் 3 இலட்சத்து 66,721 வாக்குகளைப் பெற்று அனுரகுமார திஸாநாயக்க அங்கு முன்னிலை வகிக்கிறார்.

சஜித் பிரேமதாச காலியில் 1 இலட்சத்து 89, 555 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க ஒரு இலட்சத்து 7,336 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Latest news

விக்டோரியாவில் உயரவுள்ள பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள்

மாநில அரசு அமைதியாக புதிய கட்டண உயர்வை அறிவித்த பிறகு, விக்டோரியர்கள் பொதுப் போக்குவரத்தில் ஆண்டுக்கு $104 வரை கூடுதலாகச் செலுத்துவார்கள் என தெரியவந்துள்ளது. ஜனவரி 1...

குயின்ஸ்லாந்தின் சாலைகளில் திகில் – மூவர் பலி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் நேற்று நடந்த மூன்று தனித்தனி கார் விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே நடந்த ஒரு சம்பவத்தில், பாலத்தில் இருந்து விலகி ஆற்றில்...

Bondi தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலியா முழுவதும் தீபங்கள் ஏற்றி அஞ்சலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை Bondi கடற்கரைப் பகுதியில் 15 பேர் கொல்லப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு நேற்றுடன் ஒரு வாரம் நிறைவடைகிறது. அதற்காக, நேற்று ஆஸ்திரேலியா முழுவதும்...

உலகின் முதல் முறையாக சக்கர நாற்காலியில் விண்வெளிக்குச் சென்ற நபர்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவர் விண்வெளியில் முதன்முதலில் நுழைந்தார். அதுதான் 33 வயதான ஜெர்மன் பொறியாளர்...

வெளியாகப்போகும் 3 இடியட்ஸ் படத்தின் அடுத்த பாகம்

பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கான், கரீனா கபூர், மாதவன் மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோர் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி...

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...