Newsவரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

வரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

-

ஜப்பானின் Ishikawa மாகாணத்தின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதி குறித்த பகுதியை அழித்த பயங்கரமான நிலநடுக்கத்தில் இருந்து மீண்டு வரும் வாஜிமா மற்றும் சுஸு நகரங்கள், சனிக்கிழமையன்று தொடங்கி உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மதியம் 03:00 GMT வரை நீடித்த அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல ஆறுகள் பெருக்கெடுத்தமையினால், 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

திங்களன்று (23) சுமார் 4,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சனிக்கிழமையன்று இஷிகாவாவிற்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.

திங்கள்கிழமை (23) நண்பகல் வரை தொடர் மழை நீடிக்கும் என்பதால் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

ஜனவரி மாதம் 7.5 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து இப்பகுதி இன்னும் மீண்டு வருகிறது.

நிலநடுக்கத்தால் குறைந்தது 236 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...