Newsவரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

வரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

-

ஜப்பானின் Ishikawa மாகாணத்தின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதி குறித்த பகுதியை அழித்த பயங்கரமான நிலநடுக்கத்தில் இருந்து மீண்டு வரும் வாஜிமா மற்றும் சுஸு நகரங்கள், சனிக்கிழமையன்று தொடங்கி உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மதியம் 03:00 GMT வரை நீடித்த அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல ஆறுகள் பெருக்கெடுத்தமையினால், 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

திங்களன்று (23) சுமார் 4,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சனிக்கிழமையன்று இஷிகாவாவிற்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.

திங்கள்கிழமை (23) நண்பகல் வரை தொடர் மழை நீடிக்கும் என்பதால் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

ஜனவரி மாதம் 7.5 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து இப்பகுதி இன்னும் மீண்டு வருகிறது.

நிலநடுக்கத்தால் குறைந்தது 236 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...