Newsஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும்...

ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

-

ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது இஸ்ரேல்.

காஸாவின் பின்லேடன் என அறியப்படும் சின்வார் ஆகஸ்டு மாதத்தில் தான் ஹமாஸ் படைகளின் தலைவராக பொறுப்புக்கு வந்தார். ஆனால் தற்போது இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஊடகங்களே, சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளன. காஸா பகுதியில் மறைந்திருந்த சின்வார், இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்கள் குறிப்பிட்டு வருகிறது.

ஆனால் எங்கே எப்போது அவர் கொல்லப்பட்டார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையிலேயே விசாரணை முன்னெடுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், சின்வார் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் எல்லையில் முன்னெடுக்கப்பட்ட அக்டோபர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சின்வார் என்றே இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது. இதனாலையே, அவர்களின் முதல் இலக்கு சின்வார் என கூறி வந்தனர்.

இருப்பினும் கடந்த 11 மாதங்களில் சின்வார் பல கட்டங்களில் இஸ்ரேல் இலக்கில் இருந்து தப்பி வந்ததாகவே கூறப்படுகிறது. மட்டுமின்றி, அமெரிக்க ராணுவமும் கடந்த மாதம் சின்வார் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தது.

சுமார் 22 ஆண்டு காலம் பயங்கரவாதம், கொலை மற்றும் கடத்தல் திட்டங்களுக்காக இஸ்ரேல் சிறையில் தண்டனை அனுபவித்தவர் சின்வார். தற்போது நடக்கும் போரானது சின்வார் கொல்லப்படும் வரையில் நீடிக்கும் என்றே இஸ்ரேல் ராணுவ தளபதி தொடர்ந்து கூறி வருகிறார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...