Perthபெர்த்தில் பூங்கா ஒன்றில் மக்களை தாக்கும் நாய்கள்

பெர்த்தில் பூங்கா ஒன்றில் மக்களை தாக்கும் நாய்கள்

-

பெர்த்தின் வடக்கில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு ஜோடி off-leash நாய்களால் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க் கிழமை காலை John Moloney பூங்காவில் இரண்டு பெரிய நாய்கள் தீடீரென வந்து தங்களை தாக்கியதாக சம்பவத்தில் காயமடைந்த நபரான ஹெலன் மாடோ கூறினார்.

ஒரு நாய் ஹெலன் மாடோவின் காலையும், மற்றொரு நாய் அவரின் இடுப்பைப் பிடித்து தாக்க ஆரம்பித்துள்ளன. மாடோ உதவிக்காக கத்திக் கொண்டிருந்த நேரத்தில் அவ்வழியே சென்ற கார் சாரதி அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

குறித்த நாய்கள் காரை நிறுத்தி மாடோவை காப்பாற்ற முயன்ற போது தன் காரையும் தாக்க ஆரம்புத்ததாக கார் சாரதி கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு அந்த நாய்கள் எங்கு சென்றன என்று தெரியவில்லை, என்று மாட்டோ கூறினார்.

20 வயதுடைய மற்றொரு பெண்ணும் பல நாய் கடிகளுக்கு உள்ளாகி தற்போது சிகிச்சைக்காக Joondalup Health Campus-க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நாய்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்று Wanneroo நகர பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததோடு, விசாரணைகள் நடத்தி வருவதாகவும் கூறினார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...