Newsஆஸ்திரேலியாவில் 1200 SIM கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர்

ஆஸ்திரேலியாவில் 1200 SIM கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர்

-

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன நபருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தொலைபேசிகளுக்கு 4.9 மில்லியன் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சீன பிரஜை காலாவதியான வீசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதான சீனப் பிரஜை கடந்த செவ்வாய்கிழமை சைபர் கிரைம் துப்பறியும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், காவல்துறையின் தேடுதல் வாரண்ட் உள்ளது.

இந்த மோசடி குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக 1200 சிம் கார்டுகளை அவர் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் குறுஞ்செய்தி ஊடாக மக்களின் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...