Newsமனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

மனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

-

மனைவியின் பாதுகாப்புக்காக டுபாய் கோடீஸ்வரர் ஒருவர் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தீவின் மதிப்பு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தனக்காக தனது கோடீஸ்வரக் கணவர் ஒரு தனித்தீவை வாங்கியுள்ளதாக இஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

டுபாயைச் சேர்ந்த 26 வயதான சௌடி அல் நாடக் என்ற பெண் இங்கிலாந்தில் பிறந்தவர் இவர் டுபாயில் உள்ள கோடீஸ்வரரான ஜமால் அல் நாடக் ஐ திருமணம் செய்துள்ளார். இருவரும் டுபாயில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துள்ளனர். சௌடி தற்போது முழுநேர இல்லத்தரசியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய கோடீஸ்வரரின் மனைவியாக இருந்தபோதிலும்கூட சௌடி அல் நடாக் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக்கில் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரின் இணையதள வீடியோக்கள் மூலம் அவரின் ஆடம்பர வாழ்க்கையை பிரபலபடுத்தி வருகிறார். உதாரணமாக வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டங்கள், ஆடம்பரமான இரவு உணவுகள், டிசைனர் பொட்டிக்குகளில் ஷொப்பிங் செய்தல் போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு சௌடி மிகவும் பிரபலம்.

மேலும், இந்த ஜோடி 10 லட்சம் டொலர்களுக்கு ஒரு வைர மோதிரம் வாங்கியது, 20 லட்சம் டொலர்களுக்கு ஓவியம் வாங்கியது உள்ளிட்ட வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

தற்போது அவரது கணவர் தனித் தீவு வாங்கித் தந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒருவாரத்துக்குள்ளாகவே, அந்த வீடியோ 24 இலட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...