Newsமனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

மனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

-

மனைவியின் பாதுகாப்புக்காக டுபாய் கோடீஸ்வரர் ஒருவர் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தீவின் மதிப்பு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தனக்காக தனது கோடீஸ்வரக் கணவர் ஒரு தனித்தீவை வாங்கியுள்ளதாக இஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

டுபாயைச் சேர்ந்த 26 வயதான சௌடி அல் நாடக் என்ற பெண் இங்கிலாந்தில் பிறந்தவர் இவர் டுபாயில் உள்ள கோடீஸ்வரரான ஜமால் அல் நாடக் ஐ திருமணம் செய்துள்ளார். இருவரும் டுபாயில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துள்ளனர். சௌடி தற்போது முழுநேர இல்லத்தரசியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய கோடீஸ்வரரின் மனைவியாக இருந்தபோதிலும்கூட சௌடி அல் நடாக் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக்கில் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரின் இணையதள வீடியோக்கள் மூலம் அவரின் ஆடம்பர வாழ்க்கையை பிரபலபடுத்தி வருகிறார். உதாரணமாக வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டங்கள், ஆடம்பரமான இரவு உணவுகள், டிசைனர் பொட்டிக்குகளில் ஷொப்பிங் செய்தல் போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு சௌடி மிகவும் பிரபலம்.

மேலும், இந்த ஜோடி 10 லட்சம் டொலர்களுக்கு ஒரு வைர மோதிரம் வாங்கியது, 20 லட்சம் டொலர்களுக்கு ஓவியம் வாங்கியது உள்ளிட்ட வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

தற்போது அவரது கணவர் தனித் தீவு வாங்கித் தந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒருவாரத்துக்குள்ளாகவே, அந்த வீடியோ 24 இலட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...