Cinemaநீங்கள் தான் அடுத்த தளபதியா?- ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்

நீங்கள் தான் அடுத்த தளபதியா?- ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்

-

சின்னத்திரை தொகுப்பாளராக தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தரமான படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகனாக மாறியுள்ளார்.

கோட் படத்தில் விஜயுடனான இவரது கேமியோ கதாபாத்திரம் திரையரங்குகளில் விசில் பறக்க செய்தது.

இதனைத்தொடர்ந்து, இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அமரன் படம் அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்திய பட பிரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயனை நோக்கி ரசிகர்கள் “அடுத்த தளபதி” என்று கோஷமிட்டனர்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் கூறுகையில், “ஒரே தளபதி தான், ஒரே தல தான், ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார் தான். இந்த அடுத்த.. அதெல்லாம் வாய்ப்பே கிடையாது.

அவங்க சினிமாக்களில் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்திருக்கேன், அவங்கள மாதிரி நல்ல படங்கள் பண்ணி ஹிட் கொடுத்து ஜெயிக்கணும்னு நினைக்கலாம். அவங்களாவே ஆகணும்னு நினைக்கிறது சரி கிடையாதுனு நான் நினைக்குறேன்” என்று கூறினார்.   

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...