Cinemaவீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைகளின் பின்னர், நேற்றிரவு (03) 11.00 மணியளவில் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இருதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்காக ரஜினிகாந்த்துக்கு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாமல், டிரான்ஸ்கேட்டர் முறையில் இரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

ஒக்டோபர் 1 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் கண்காணிப்பில் இருந்தார்.

இந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் நேற்றிரவு வைத்தியாசலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனினும், ரஜினிகாந்தை ஓரிரு வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல் நிலை முன்னேறியவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தின் பணியை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

பிரபல கடையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா – அதிருப்தியடைந்துள்ள வாடிக்கையாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் மார்பளவு உயரத்தில் அலமாரிகளில் பொருத்தப்பட்ட புதிய கேமரா அமைப்பைப் பற்றி வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வூல்வொர்த்ஸின் பல கிளைகளில்,...

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

அல்பானீஸின் வீட்டின் முன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்

நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் உள்ள பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வீட்டின் முன் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் தேசிய வீட்டுவசதி நெருக்கடியின் மீது...

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அறிகுறி

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். விக்டோரியன் அரசாங்க நிறுவனம் ஒன்றால் செய்யப்பட்ட வாடகைகளை திருத்தும் திட்டம் இதற்குக் காரணமாக...