Newsஇரு மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

இரு மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

-

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களின் பல பகுதிகளில் கடுமையான புயல் நிலை மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வார இறுதியில் வெப்பம் அதிகரித்தாலும், இந்த இரு மாநிலங்களிலும் திடீரென வானிலை மாறி, கனமழை மற்றும் புயல் வீசும் சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸில் இருந்து பிரிஸ்பேன், டூவூம்பா மற்றும் ஜிம்பி உள்ளிட்ட தென்கிழக்கு குயின்ஸ்லாந்து வரை பலத்த காற்று, பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் புயல் தீவிரமடைவதால் குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலத்த காற்றினால் மரங்கள் அல்லது மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும், குறித்த பகுதிகளில் வாகனங்களை செலுத்தும் போது விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வியாழன் வரை பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் புயல்கள் தொடரும், மேலும் புயல் அபாயம் வியாழக்கிழமைக்குள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோர்டன் வளைகுடா மற்றும் கோல்ட் கோஸ்ட் பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கையும் பணியகம் விடுத்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

வெள்ளத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முழுவதும் பரவும் மற்றுமொரு நோய்

வெள்ளத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா முழுவதும் மலேரியா வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பதிவான தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 71 ஆக உயர்ந்துள்ளதாகவும், அது ஆஸ்திரேலிய...

வெள்ளத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முழுவதும் பரவும் மற்றுமொரு நோய்

வெள்ளத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா முழுவதும் மலேரியா வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பதிவான தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 71 ஆக உயர்ந்துள்ளதாகவும், அது ஆஸ்திரேலிய...

200 ஆண்டுகள் பழமையான ஆணுறையை காட்சிப்படுத்த ஒரு சிறப்பு கண்காட்சி

நெதர்லாந்தின் Amsterdam நகரில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை சிறப்பு கண்காட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு செம்மறி ஆடுகளின் பிற்சேர்க்கையிலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் ஒரு கன்னியாஸ்திரி...