Newsஉலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடம் - வைரலாகும் வீடியோ

உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடம் – வைரலாகும் வீடியோ

-

சமீபத்தில், சீனாவின் Hangzhou-வில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ‘Regent International’ என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டிடம், 206 மீட்டர் மற்றும் 36 முதல் 39 மாடிகளை கொண்டுள்ளது. ஹாங்சோவின் மத்திய வணிகப் பகுதியான Qianjiang Century City-யில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது.

இது முதன்முதலில் ஆறு நட்சத்திர சொகுசு ஹோட்டலாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஒரு பெரிய குடியிருப்பு வளாகமாக மாற்றப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தற்போது இந்த குடியிருப்புகளில் 20,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மேலும், உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடம் ஒரு சுய-கட்டுமான சமூகம் என்று கூறப்படுகிறது.

இந்த கட்டிடத்தில் Food court, நீச்சல் குளங்கள், கடைகள், சலூன் மற்றும் cafe உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. குடியிருப்பாளர்களுக்கு தேவையான அனைத்தும் அந்த கட்டிடத்திலேயே கிடைப்பதால், அவர்கள் அரிதாகவே வெளியே செல்ல வேண்டி உள்ளது.

இதற்கிடையில், இந்த பிரம்மாண்ட குடியிருப்பு கட்டிடத்தின் வீடியோ X வலைதளத்தில் 150,000 பார்வைகளை கடந்துள்ளது. இந்த பிரம்மாண்ட குடியிருப்பு கட்டிடம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...