Newsஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் உலகப் புகழ்பெற்ற நிறுவனம்

ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் உலகப் புகழ்பெற்ற நிறுவனம்

-

உலகின் முன்னணி நிறுவனமான Boeing, தனது உலகளாவிய பணியாளர்களை 10 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வேலை வெட்டுக்கள் மூலம் சுமார் 17,000 பேர் வேலை இழப்பார்கள் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

தொழிலில் நிலவும் பிரச்னையால், உற்பத்தி தாமதமாகி வருவதே, இந்த பெரிய அளவிலான வேலையிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த முடிவு குறித்து, Boeing நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கெல்லி ஆர்ட்பெர்க், விஸ்சன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பணி குறைப்பு காரணமாக அனைத்து நிர்வாக தர அதிகாரிகள், மேலாளர்கள் மற்றும் பொது ஊழியர்களின் பணியிடங்கள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விமானத்தின் தரம் மற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஆகியவற்றில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, தயாரிப்பு துறையில் நஷ்டம் ஏற்பட்டதாக Boeing நிறுவனம் முன்பு தெரிவித்திருந்தது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...