Newsவிக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

-

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.

விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24 மணி நேரத்தில் 650 அழைப்புகளுக்கு பதிலளித்ததாகக் கூறியது, அவற்றில் பெரும்பாலானவை ஜீலாங் மற்றும் பிராங்க்ஸ்டன் பகுதிகளைச் சேர்ந்தவை.

சுமார் 45 நிமிடங்களில் 50 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதுடன், திடீர் வெள்ளமும் பதிவாகியுள்ளது.

முன்னெச்சரிக்கைகளை மீறி வெள்ளத்தில் தங்கள் கார்களை ஓட்டச் சென்ற மூன்று பேரையும் நிவாரணக் குழுக்கள் தங்கள் கார்களில் இருந்து மீட்க வேண்டியிருந்தது.

விக்டோரியா மாநிலத்தில், மரங்கள் விழுந்ததில் சுமார் 100 சம்பவங்களில் மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 900 வீடுகளில் இன்னும் மின்சாரம் இல்லை.

தெற்கு அவுஸ்திரேலியாவில் 1100க்கும் மேற்பட்ட வீடுகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளியுடன் விக்டோரியா மாநிலம் முழுவதும் 130,000 க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்யாது என்றும், இன்று பிற்பகல் முதல் அடுத்த சில நாட்களுக்கு காலநிலை சீராகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த உள்ள பிரபல மருந்து நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான Chemist Warehouse, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த அமைப்பு விரைவில் நாடு முழுவதும்...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த உள்ள பிரபல மருந்து நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான Chemist Warehouse, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த அமைப்பு விரைவில் நாடு முழுவதும்...