Newsசெல்போனுக்காக இரு பெரிய பாறைகளின் நடுவே சிக்கிக்கொண்ட பெண்

செல்போனுக்காக இரு பெரிய பாறைகளின் நடுவே சிக்கிக்கொண்ட பெண்

-

அவுஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாக சிக்கி கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸின் Hunter பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே இளம்பெண் ஒருவர் தலைகீழாக சிக்கிக் கொண்டார்.

தவறி விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்த போது 500 கிலோ எடையுள்ள பெரிய இரண்டு பாறைகளின் இடுக்கில் 7 மணி நேரமாக சிக்கிக் கொண்டு தவித்துள்ளார்.

சிக்கலில் சிக்கிய பெண்ணை அவரது நண்பர் விடுவிக்க முயன்ற நிலையில் அது தோல்வியில் முடிந்ததை அடுத்து அவசர சேவைகளுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், பிரம்மாண்ட பாறைகளை அகற்றி அந்த பெண் வெளியேற ஏதுவான வழியை உருவாக்க கடுமையாக உழைத்தனர்.

கிட்டத்தட்ட 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த பெண்ணை குறுகிய, S வடிவ இடைவெளியின் வழியாக கவனமாக வெளியே எடுத்தனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த பெண் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும் அந்த பெண்ணின் செல்போன் பாறைகளின் கீழே புதைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...