Newsடிரம்பின் வெற்றிக்குப் பிறகு, உலக கோடீஸ்வரர்களின் செல்வம் இன்னும் கூடும்

டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, உலக கோடீஸ்வரர்களின் செல்வம் இன்னும் கூடும்

-

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக “Boomberg’s Billionaires” இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு குறியீட்டு எண் தொடங்கப்பட்டதில் இருந்து ஒரே நாளில் (நவம்பர் 6) உலக பணக்காரர்கள் 10 பேரின் சொத்து மதிப்பு 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்திருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறியீட்டின் தரவரிசைப்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 39.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாகவும், அவரது மொத்த சொத்து மதிப்பு 434 பில்லியன் டாலர்கள் என்றும் கூறப்படுகிறது.

பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் Jeff Bezos தனது சொத்துக்களை 10.6 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 341 பில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook நிறுவனர் Mark Zuckerberg இந்த தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் அவரது சொத்து மதிப்பு 121 மில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ள பின்னணியில் அவரது மொத்த சொத்து மதிப்பு 302 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள Larry Ellison-ன் சொத்து மதிப்பு 8.2 பில்லியன் டாலர்கள் அதிகரித்து, அவரது சொத்து மதிப்பு 289 பில்லியன் டாலர்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்கள் 10 பேர் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள பிரான்ஸ் தொழிலதிபர் Bernad Arnault-இன் மொத்த சொத்து மட்டும் 4.27 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது சிறப்பு.

தரவரிசைக் குறியீட்டின்படி, ஆறாவது இடத்தில் உள்ள பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 2.73 பில்லியன் டாலர்கள் அதிகரித்து, அவரது மொத்த சொத்து மதிப்பு 238 பில்லியன் டாலர்கள்.

குறியீட்டு தரவுகளின்படி, இந்த பட்டியலில் மற்ற பதவிகளில் உள்ள Larry Page, Sergey Brin, Warren Buffet மற்றும் Steve Ballmer ஆகியோரின் சொத்துகளும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு வளர்ந்துள்ளன.

Latest news

Virgin Australia-வில் செல்லப்பிராணிகளை கொண்டு வர $150 டிக்கெட்

Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

மெல்பேர்ண் தீ விபத்தில் இரு இளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் மீது குற்றம்

மெல்பேர்ணில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த...