Newsஅடுத்த 48 மணி நேரத்தில் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

-

அடுத்த 48 மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு விக்டோரியா மற்றும் கிப்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் (BoM) எதிர்பார்க்கிறது.

விக்டோரியா மாகாணத்திற்கு வானிலை ஆய்வு மையம் (BoM) எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மாநிலத்தில் புயல் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸின் தெற்குப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், 150 கிலோமீற்றர் வேகத்தில் காற்று மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய கடும் மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு கடுமையான புயல் நிலை கிழக்கு நோக்கி நகரும் எனவும் அந்த நிலை சிட்னி கடற்கரை மற்றும் சில பகுதிகளை நெருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மேனியா மாகாணத்தில் வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் பணியகத்தின் (BoM) இணையத்தளத்தில் காணப்படும் வானிலை எச்சரிக்கைகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...