Melbourneஅடுக்குமாடி குடியிருப்புகள் மெல்பேர்ணின் தரத்தை குறைப்பதாக குற்றச்சாட்டுகள்

அடுக்குமாடி குடியிருப்புகள் மெல்பேர்ணின் தரத்தை குறைப்பதாக குற்றச்சாட்டுகள்

-

விக்டோரியா மாநில அரசு மெல்பேர்ணின் புறநகரில் உள்ள போக்குவரத்து மையங்களுக்கு அருகில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ள பின்னணியில் மெல்பேர்ண் நகரம் நான்காம் தர நகரமாக (Fourth – Rate City) மாறலாம் என நகர்ப்புற திட்டமிடல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

விக்டோரியா மாநில திட்டமிடல் துறையில் பணியாற்றிய பேராசிரியர் Michael Buxton, விக்டோரியா அரசாங்கத்தின் திட்டம் மலிவு விலையில் வீடுகளை வழங்காது என்று கூறுகிறார்.

இத்திட்டத்தின் மூலம் மக்களை மெல்பேர்ண் நகருக்கு ஈர்க்கக்கூடிய பல விடயங்களும், மெல்பேர்னை வாழ்வதற்கு ஏற்ற நகரமாக மாற்றும் பல விடயங்களும் இழக்கப்படும் என பேராசிரியர் மைக்கேல் பக்ஸ்டன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விமர்சனங்கள் முற்றிலும் தவறானவை என மாநில திட்டமிடல் அமைச்சர் சோனியா கிகென்னி கூறியுள்ளதுடன், விக்டோரியா மாநில அரசு இந்த அறிக்கைகளுடன் உடன்படவில்லை என தெரிவித்துள்ளது.

மாநில மக்களுக்கு அவர்கள் வசிக்க விரும்பும் வீட்டை வாங்க அல்லது வாடகைக்கு விடுவதற்கான வாய்ப்பை வழங்குவதில் தான் கவனம் செலுத்துவதாக Sonya Kikenny கூறியுள்ளார்.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை எளிதில் அணுகக்கூடிய பூங்காக்கள், திறந்தவெளிகள், பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் உள்ள பகுதியில் மக்கள் வசிக்க விரும்புவதாக மாநில திட்டமிடல் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...