Newsவிக்டோரியாவில் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள Woolworths Delivery

விக்டோரியாவில் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள Woolworths Delivery

-

Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலிக்கு சொந்தமான 4 கடைகளில் பணிபுரியும் 1500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மாகாணத்தில் உள்ள மூன்று விநியோக மையங்கள் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள விநியோக மையங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தொழிலாளர் சங்கம் (UWU) ஒரு புதிய பணியிட ஒப்பந்தத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் முதல் ஆண்டில் குறைந்தபட்சம் $38 ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

நிறுவனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊழியர்களின் செயல்திறனை நிர்வகிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் உள்ள முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் திணறி வருவதாக ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் (UWU) செயலாளர் டிம் கென்னடி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், Woolworth வணிக வலையமைப்பைச் சேர்ந்த Primary Connect இன் செய்தித் தொடர்பாளர், கிறிஸ்துமஸுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு தேவையான விநியோகத்தை பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...