Newsநெதன்யாகுவை கைது செய்ய சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

நெதன்யாகுவை கைது செய்ய சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

-

காஸாவில் போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தவிர, கடந்த ஆண்டு ஒக்டோபா் 7ஆம் திகதி இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் தொடா்பாக ஹமாஸ் தலைவா்களுக்கு எதிராகவும் அந்த நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஸாவில் நெதன்யாகுவும் யோவாவ் காலன்டும் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற போா்க் குற்றத்தில் ஈடுபடுவதால் அவா்களை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நீதிமன்றத்தின் குற்றஞ்சாட்டு வழக்குரைஞா் கரீம் கான் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

அப்போது அவா் வெளியிட்ட அறிக்கையில், காஸா மக்கள் உயிா்வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அவா்களுக்குக் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நெதன்யாகுவும் கலான்டும் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி செய்வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு நேற்று வியாழக்கிழமை குற்றச்சாட்டுகள் தொடரபான கோரிக்கைகளை   ஏற்றுக் கொண்டுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், கைது உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...