Perthபெர்த் மக்களுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

பெர்த் மக்களுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

-

பெர்த்தின் இரண்டு வடக்கு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காட்டுத்தீ அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Wedge Island மற்றும் Cooljarloo ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் அவசர எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மக்கள் மீண்டும் அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் உயிருக்கும், வீடுகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், கூடிய விரைவில் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், காட்டுத் தீ ஏற்படும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள பல சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன, மேலும் அவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை தங்கள் வீடுகளில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளனர்.

Latest news

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...

வெற்றியளித்துள்ள Work from home – அறிக்கையில் வெளியான தகவல்

முழுநேரமாக அலுவலகத்தில் இருப்பதை விட வீட்டிலிருந்து வேலை செய்வது அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய உற்பத்தித்திறன் ஆணையத்தின் புதிய அறிக்கை, தொலைதூர வேலை ஆஸ்திரேலியாவின்...

மளிகைப் பொருட்கள் செலவை குறைக்க AI-ஐப் பயன்படுத்தும் ஆஸ்திரேலியப் பெண்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான Brooke Ferrier, தனது குடும்பத்தின் வாராந்திர உணவைத் திட்டமிட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளார். இது பொருட்களை வாங்கும் செலவை பாதிக்கு...

விக்டோரியாவில் 4 ஆண்களைக் கத்தியால் குத்திய 24 வயது பெண் கைது

விக்டோரியா பிராந்தியத்தில் நான்கு ஆண்கள் காயமடைந்ததாகக் கூறப்படும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒரு இளம் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 24 வயதான அந்த நபர், மெல்பேர்ணுக்கு கிழக்கே உள்ள...

வரும் வாரத்தில் மோசமான வானிலைக்கு தயாராக இருக்குமாறு WA எச்சரிக்கை

முடிவடையும் இலையுதிர் காலத்திற்குப் பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவின் முதல் குளிர் காலம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு...