Cinemaசிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

-

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது. தற்போது, இந்த படம் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் வில்லன் கேரக்டர் வலிமையாக இருக்கும் என்பதால், ஒரு ஹீரோவையே வில்லனாக தேர்வு செய்ய வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், ஜெயம் ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது ஜெயம் ரவி சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு சமமான முக்கியத்துவம் மற்றும் ஹீரோவிடம் அடி வாங்கும் காட்சிகள் இருக்கக்கூடாது உள்பட சில நிபந்தனைகளுடன் ஜெயம் ரவி இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதே போல் அதர்வாவும் இந்த படத்தில் இணைகிறார் என்றும், இந்த படத்தின் மேக்கிங் செலவு மட்டுமே மொத்தம் 150 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்ததை அடுத்து, இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...