Cinemaசிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

-

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது. தற்போது, இந்த படம் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் வில்லன் கேரக்டர் வலிமையாக இருக்கும் என்பதால், ஒரு ஹீரோவையே வில்லனாக தேர்வு செய்ய வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், ஜெயம் ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது ஜெயம் ரவி சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு சமமான முக்கியத்துவம் மற்றும் ஹீரோவிடம் அடி வாங்கும் காட்சிகள் இருக்கக்கூடாது உள்பட சில நிபந்தனைகளுடன் ஜெயம் ரவி இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதே போல் அதர்வாவும் இந்த படத்தில் இணைகிறார் என்றும், இந்த படத்தின் மேக்கிங் செலவு மட்டுமே மொத்தம் 150 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்ததை அடுத்து, இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு புதிய சேவை

ஆஸ்திரேலியாவில் எங்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப Telstra செயற்கைக்கோளிலிருந்து மொபைல் வரை குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் கவரேஜ் உள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

சிட்னியில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட உடல் – ஒருவர் கைது

சிட்னியின் உள் மேற்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

சட்டவிரோத புகையிலை சந்தையை சுத்தம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

சட்டவிரோத புகையிலை கறுப்புச் சந்தை தெருக்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி, அதை சுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று NSW பிரதமர்...