Newsஆஸ்திரேலியாவில் Temporary Migration விசா வைத்திருப்பவர்கள் பற்றி ஐ.நா. சிறப்பு அறிக்கை

ஆஸ்திரேலியாவில் Temporary Migration விசா வைத்திருப்பவர்கள் பற்றி ஐ.நா. சிறப்பு அறிக்கை

-

அவுஸ்திரேலியாவில் உள்ள தற்காலிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, சில முதலாளிகள் தற்காலிக புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சுரண்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புலம்பெயர்ந்தோர் சட்டவிரோத ஆட்சேர்ப்பு, குறைவான ஊதியம் அல்லது ஊதியத்தை நிறுத்துதல், கடுமையான வேலை நிலைமைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தாற்காலிக விசா பெற்ற பெண்கள் கர்ப்பம் தரித்தாலும் பணி நீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக விசா வைத்திருக்கும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று அந்த அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த தற்கால அடிமைத்தனம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டாவினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மத்திய அரசாங்கம் பேராசிரியர் ஒபோகாட்டாவை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்தது. மேலும் அவர் இரண்டு வார பயணத்தின் போது மெல்போர்ன், தென் மேற்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள ரிவர்னா, கான்பெர்ரா, சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவர் தனது கண்டுபிடிப்புகளை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை செய்துள்ளார், மீண்டும் ஐக்கிய நாடுகள் சபை ஆஸ்திரேலியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...