Newsசிரியாவில் வெடித்துள்ள உள்நாட்டு போர் - கைப்பற்றப்பட்ட அலெப்போ நகர்

சிரியாவில் வெடித்துள்ள உள்நாட்டு போர் – கைப்பற்றப்பட்ட அலெப்போ நகர்

-

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா ஜனாதிபதியாக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் ஜனாதிபதி பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷ்யா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு அங்கங்கே போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக இது மாறியுள்ளது.

முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் இராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் அலெப்போ நகரில் இருந்து இராணுவம் தாற்காலிகமாக பின்வாங்கி உள்ளது.

மேலும் அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது இராணுவம் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்று காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news

போராட்டங்களின் போது Capsicum spray தெளிப்பது சட்டவிரோதம் – நீதிமன்ற தீர்ப்பு

அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் Capsicum spray பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு...

பாலியில் போக்குவரத்து விதிகளை மீறிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், "Bang Bus" என்று பெயரிடப்பட்ட...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

கிறிஸ்துமஸ் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் – மருத்துவர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனை (RCH) மருத்துவர்கள், கிறிஸ்துமஸ் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கும்போது குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர். காந்தங்கள் மற்றும் பொத்தான் பேட்டரிகள்...