Melbourneமெல்பேர்ணில் காணாமல் போயுள்ள பாலியல் குற்றவாளி

மெல்பேர்ணில் காணாமல் போயுள்ள பாலியல் குற்றவாளி

-

மெல்பேர்ணில் அடையாளம் காணப்பட்ட பாலியல் குற்றவாளி ஒருவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்காணிப்பு உத்தரவின் கீழ் இருந்த 32 வயதுடைய குற்றவாளியான Theo Briggs நவம்பர் 30ம் திகதி மாலை 6.00 மணிக்குப் பின்னர் St Kilda-இல் காணாமல் போனார்.

இதற்கிடையில், இந்த குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், இவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை எதிர்பார்த்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் Mooroopna, Shepparton மற்றும் Beraii ஆகிய பகுதிகளில் அடிக்கடி நேரத்தை செலவிடுவதை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளிக்கு விசேட செய்தியொன்றை விடுத்துள்ள பொலிஸார், அவர் விரைவில் பொலிஸில் சரணடையுமாறும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நபரை மறைப்பதற்கு உதவி செய்யும் நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தற்போது, ​​இந்த குற்றவாளியின் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள பொலிஸார், இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால், 000 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...