NewsProtection VISA தொடர்பில் பரப்பப்படும் பல தவறான தகவல்கள்!

Protection VISA தொடர்பில் பரப்பப்படும் பல தவறான தகவல்கள்!

-

பாதுகாப்பு விசா (துணைப்பிரிவு 866) தொடர்பில் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டமையால், புலம்பெயர்ந்தோர் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத்திரமே இந்த விசா வழங்கப்படுவதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து சட்டவிரோத குடியேற்றத்திற்கு ஆதரவளித்த வெளிநாட்டவரின் வீசாவை உள்நாட்டலுவல்கள் திணைக்களம் இரத்துச் செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1000 வீசா விண்ணப்பதாரர்களுக்கு குடிவரவு ஆலோசனை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நபர் அதிக பணம் வசூலித்துள்ளதாகவும், அந்த விண்ணப்பதாரர்களை பாதுகாப்பு விசாவிற்கு (துணைப்பிரிவு 866) விண்ணப்பிக்குமாறு தவறாக அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான வீசா விண்ணப்பங்கள் மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களின் வீசா அனுமதியில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட குடிவரவு முகவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மட்டுமே புலம்பெயர்ந்தோருக்கு தேவையான உதவிகளை வழங்க கட்டணம் வசூலிக்க முடியும் என்று உள்துறை அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...