Melbourneமெல்பேர்ணில் யூத தேவாலயத்துக்கு தீ வைப்பு!

மெல்பேர்ணில் யூத தேவாலயத்துக்கு தீ வைப்பு!

-

அவுஸ்திரேலிய நகரமான மெல்பேர்ணில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலையில் முகமூடி அணிந்த விசமிகள், அங்கு அமைந்துள்ள யூத தேவாலயத்துக்கு தீ வைத்துள்ளனர்.

இது நாடு முழுவதும் பரவலான கண்டனத்தைத் தூண்டியது.

அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயத்தில் அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு (1710 GMT) சில பக்தர்கள் உள்ளே இருந்தபோது தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தென்கிழக்கு மெல்பேர்ண் புறநகர் ரிப்போன்லியாவில் உள்ள கட்டிடத்தின் பெரும்பகுதி எரிந்து தீக்கிரையாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், எவருக்கும் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்ல‍ை என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புக்கு இடமில்லை என்றார்.

அதேநேரம், ஒரு வழிபாட்டுத் தலத்தில் இந்த வன்முறை, அச்சுறுத்தல் என்பது மூர்க்கத்தனமானது. இந்த தாக்குதல் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் சமூகத்தில் அச்சத்தை உருவாக்குவதை தெளிவாக நோக்கமாகக் கொண்டுள்ளதும் அவர் குறிப்பிட்டார்.

விக்டோரியா மாநில காவல்துறையும் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசாரும் கூட்டிணைந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...