Newsஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை பொறிக்க ஸ்பெயின் அரசு முடிவு

ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை பொறிக்க ஸ்பெயின் அரசு முடிவு

-

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்பெயின் அரசு அதிரடி நடவடிக்கையெடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் விற்கப்படும் செல்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை விரைவில் பார்க்கலாம். அதாவது, புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் போல.செல்போன்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதில் எழுதப்பட்டிருக்கும்.

செல்போன் உபயோகிப்பதை ‘பொது சுகாதார தொற்றுநோய்’ எனக்குறிப்பிட்டுள்ள ஸ்பெயின் அரசு, நாட்டு மக்கள் அதிக நேரம் ஸ்மார்ட் தொலைபேசியை உபயோகிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய முன்னெடுப்பை எடுக்க உள்ளது.

இதில் மொபைல் போன்களின் தீய விளைவுகள் பற்றி இடம்பெறும். இதற்காக 250 பக்க அறிக்கை தயாரிக்க 50 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

13 வயது வரையிலான குழந்தைகளுக்கான டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இந்தக் குழு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு 3 வயது வரை டிஜிட்டல் சாதனம் கொடுக்கக்கூடாது. 6 வயது குழந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம் செல்போன் கொடுக்க வேண்டும்.

இது தவிர, 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இணையம் இல்லாத போன்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...