Breaking Newsதரவு மோசடியைத் தடுக்க ஆஸ்திரேலிய மத்திய அரசின் புதிய நடவடிக்கை

தரவு மோசடியைத் தடுக்க ஆஸ்திரேலிய மத்திய அரசின் புதிய நடவடிக்கை

-

தனிப்பட்ட தகவல்களை வழங்காமல் தனி நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் புதிய முறை தொடர்பான பரிசோதனையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அடையாள மோசடியை தடுக்க உருவாக்கப்பட்ட உலகின் முதல் திட்டம் இது என்று கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 527 குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Trust Exchange” எனப்படும் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை அமைப்பு பிரிஸ்பேர்ணில் உள்ள மருத்துவ மையத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இதன் மூலம் ஆவணத் தேவைகள் மட்டுப்படுத்தப்படும் என ஊகிக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் மூலம், ஆஸ்திரேலியர்கள் myGov wallet உடன் இணைத்து, தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது, ​​இந்த முறை மருத்துவ சேவைகளை வழங்கும் தரப்பினருக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் வங்கிகள், ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் ஹோட்டல்கள் இந்த அமைப்புடன் இணைக்கப்படும் என்று அரசாங்கம் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...