எதிர்வரும் கூட்டாட்சித் தேர்தலில் தொழிற்கட்சி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால், ஒரு குடும்பம் வாரத்திற்கு மூன்று நாட்கள் குழந்தை பராமரிப்பு மானியங்களைப் பெறும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.
அடுத்த 5 வருட காலப்பகுதியில் 427 மில்லியன் டொலர்களை செலவிட எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்ட உற்பத்தித்திறன் கமிஷன் அறிக்கை ஆண்டு வருமானத்தில் $530,000 வரை சம்பாதிக்கும் ஒவ்வொரு குடும்பமும் வாரத்திற்கு மூன்று நாட்கள் குழந்தை பராமரிப்புக்கு மானியம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இதேவேளை, குழந்தைப்பருவத்திற்கு முற்பட்ட கல்வி நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் விரிவாக்குவதற்கும் 1 பில்லியன் டொலர் நிதியொன்று தயாரிக்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஒரு குடும்பம் பெற வேண்டிய மானியத் தொகையை நிர்ணயிக்கும் முறையை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அடுத்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றால், இந்தக் கொள்கைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.





