Newsஇஸ்தான்புல் விமான நிலையத்தில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 பயணிகள்

இஸ்தான்புல் விமான நிலையத்தில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 பயணிகள்

-

துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பை செல்லவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டின் தளங்களில் பதிவிட்டுள்ளனர். விமான பயணிகளில் ஒருவர் தனது பதிவில், “முதலில் விமானம் இரண்டு முறை தாமதமானது, பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், 12 மணி நேரம் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் விமான பயணிகளில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு எதுவும் வழங்கப்படவில்லை. இண்டிகோ நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை, பயணிகளை அனுகவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக ஏர்ஹெல்ப் ஸ்கோர் வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...