Breaking Newsஜனவரி 01 முதல் விக்டோரியாவில் பொதுப் போக்குவரத்து கட்டணம் உயர்வு

ஜனவரி 01 முதல் விக்டோரியாவில் பொதுப் போக்குவரத்து கட்டணம் உயர்வு

-

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பின்னர், விக்டோரியாவில் பொது போக்குவரத்து கட்டணங்கள் ஜனவரி 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜனவரி 1 முதல் விக்டோரியா பொது போக்குவரத்து நெட்வொர்க்கில் தினசரி கட்டண வரம்பு $ 11 ஆக நிர்ணயிக்கப்படும் என்று அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போதைய $10.60 தினசரி வரம்பு 40 காசுகள் அதிகரிக்கும்.

வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் வரம்பு 40 காசுகள் அதிகரித்து இந்த எண்ணிக்கை $7.60 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி சலுகை கட்டண வரம்பு $5.30ல் இருந்து $5.50 ஆகவும், வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களுக்கான சலுகை வரம்பு $3.60ல் இருந்து $3.80 ஆகவும் அதிகரிக்கும்.

கிறிஸ்மஸ் தினத்தன்று விக்டோரியாவில் அனைத்து பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் இலவசம் என்ற அறிவிப்பில், ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

எவ்வாறாயினும், பிராந்திய கட்டண வரம்பின் தற்போதைய பெறுமதியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...