Newsஅதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமாக கிறிஸ்துமஸ் தினம்

அதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமாக கிறிஸ்துமஸ் தினம்

-

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) விக்டோரியா மாநிலத்தில் அதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமொன்றாக பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிறிஸ்மஸ் காலத்தில் அதிக குடும்ப வன்முறைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ் தினத்தன்று குடும்ப வன்முறை 33% அதிகரித்துள்ளதாக விக்டோரியா காவல்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதியன்று மட்டும் 91 காவல்துறை உத்தரவை மீறிய சம்பவங்களும், 79 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், டிசம்பர் 2023 இல், குடும்ப வன்முறை தொடர்பான சுமார் 8668 நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பண்டிகை காலங்களில் தீவிர ரோந்துகள் மேற்கொள்ளப்படும் என குடும்ப வன்முறை கட்டளை உதவி ஆணையாளர் லோரன் கால்வே மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...