Newsஅடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

அடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

-

விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது.

தீ தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால் மொய்ஸ்டன் மற்றும் பொமோனல் நகரங்களுக்கு அவசர எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீயின் அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடனடியாக வெளியேறி, அபாயகரமானதாக மாறுவதற்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு மணித்தியாலங்களில் காட்டுத் தீ மேலும் பரவும் என விக்டோரியா அவசரகால திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விக்டோரியா காட்டுத் தீயினால் சுமார் 40000 ஹெக்டேயர் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...