தெற்கு அவுஸ்திரேலியாவில் ஓட்டுநர் ஒருவருக்கு $27,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை பெற்றவர் காரை ஓட்டிச் சென்ற போது கைத்தொலைபேசியை பாவித்த குற்றச்சாட்டில் 41 தடவைகள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி கடந்த 03 மாதங்களில் கையடக்கத் தொலைபேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டிச் சென்ற சாரதிகளின் எண்ணிக்கை 28,000 இற்கும் அதிகமானதாக அண்மைய புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் சாரதி அனுமதிப்பத்திரமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Regency Park-ல் அமைந்துள்ள North – South Motorway கேமரா மூலம் வாகனம் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான சாரதிகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த சாரதிகளின் எண்ணிக்கை 7000 என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





