அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, தென் ஆஸ்திரேலிய மாநில அரசு, மாநிலத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்தச் சலுகை ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மாத உதவித்தொகையாக $255.60 பெறுவார்கள்.
மாநிலத்தில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள், சென்டர்லிங்க் கொடுப்பனவு வைத்திருப்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகைக்கு தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





