Sportsஉலகின் வயதான ஒலிம்பிக் சம்பியன் காலமானார்!

உலகின் வயதான ஒலிம்பிக் சம்பியன் காலமானார்!

-

ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சம்பியன் Agnes Geletti காலமானார்.

103ஆவது வயதான இவர் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள வைத்தியசாலையில் நேற்று (02) உயிரிழந்துள்ளார்.

1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது.

பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் Geletti என இவர் மாற்றிக்கொண்டார்.

ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.

அழித்தொழிப்பில் இருந்து தப்பிய Geletti போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார். ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துக்கொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

இஸ்ரேலில் குடியேறிய அவர் ரோபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

Geletti ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் வரும் 9ம் திகதி தனது 104ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

Exmouth கடற்கரையில் அதிகரித்துவரும் ஆபத்தான கடல் உயிரினங்களின் தாக்கம்

Exmouth கடற்கரையில் ஆபத்தான கடல் உயிரினங்களைப் பார்ப்பதும் அவற்றுடன் தொடர்பு கொள்வதும் அதிகரித்து வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு குளிர்காலத்தில் இருந்து தப்பிக்க பார்வையாளர்கள் வடக்கு நோக்கிச்...

விபத்துக்குள்ளான Air India விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

Air India விமானத்தின் விமானத் தரவுப் பதிவுக் கருவி அல்லது கருப்புப் பெட்டியை இந்திய புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கூரையில் அது...

சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை செலுத்தும் விக்டோரியா போக்குவரத்துத் துறை

இந்த வார தொடக்கத்தில் Princes Freeway-இல் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை விக்டோரியாவின் போக்குவரத்துத் துறை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2022 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்குப் பகுதிக்கு 132 கிராம் methylamphetamine- கடத்தியதற்காக 47 வயது பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Merlou...