NewsOpen AI மீது குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்!

Open AI மீது குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்!

-

அமெரிக்காவில் Open AI நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் இறந்த நிலையில், அவரது கருவிகள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி இளைஞர் சுசிர் பாலாஜி Open AI நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால், அந்நிறுவனம் பதிப்புரிமை விதிகளை மீறுவதாக கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டினார்.

அதன் பின்னர் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது இல்லத்தில் சுசிர் பாலாஜி இறந்து கிடந்தார்.

துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் முதலில் தெரிவித்தனர். ஆனால் இளைஞரின் பெற்றோர் அதனை மறுத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் விசாரணையில் சுசிர் பாலாஜியின் அறையில் இருந்த சிசிடிவி கமெராக்கள், பென்டிரைவ் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. மேலும், சுசிர் ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக தலையில் சுடப்பட்டிருக்கலாம் என்றும், அவரது அறை சூறையாடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுசிரின் கணினியில் இருந்த தரவுகளை யாரோ எடுத்திருப்பதாகவும் விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பிரேத பரிசோதனை மற்றும் அவரது அறையில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

உலக பல்கலைக்கழக தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஆஸ்திரேலியா

2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இது உயர்கல்விக்கான ஆஸ்திரேலியாவின் உலகளாவிய நற்பெயரை சேதப்படுத்தியதாக எதிர்க்கட்சி கல்வி அமைச்சர் ஜோனாதன்...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் விக்டோரியாவில் அதிகரிக்கும் குற்றங்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது. இளைஞர் வன்முறையும் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. விக்டோரியன்...

சமூக ஊடக கணக்குகளை சரிபார்த்து மாணவர் விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவு 

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் அமலுக்கு வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டங்கள் டிசம்பர் முதல் அமலுக்கு வரும். இந்த நோக்கத்திற்காக வயது சரிபார்ப்பு...

சமூக ஊடக கணக்குகளை சரிபார்த்து மாணவர் விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவு 

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் அமலுக்கு வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டங்கள் டிசம்பர் முதல் அமலுக்கு வரும். இந்த நோக்கத்திற்காக வயது சரிபார்ப்பு...