NewsOpen AI மீது குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்!

Open AI மீது குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்!

-

அமெரிக்காவில் Open AI நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் இறந்த நிலையில், அவரது கருவிகள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி இளைஞர் சுசிர் பாலாஜி Open AI நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால், அந்நிறுவனம் பதிப்புரிமை விதிகளை மீறுவதாக கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டினார்.

அதன் பின்னர் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது இல்லத்தில் சுசிர் பாலாஜி இறந்து கிடந்தார்.

துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் முதலில் தெரிவித்தனர். ஆனால் இளைஞரின் பெற்றோர் அதனை மறுத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் விசாரணையில் சுசிர் பாலாஜியின் அறையில் இருந்த சிசிடிவி கமெராக்கள், பென்டிரைவ் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. மேலும், சுசிர் ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக தலையில் சுடப்பட்டிருக்கலாம் என்றும், அவரது அறை சூறையாடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுசிரின் கணினியில் இருந்த தரவுகளை யாரோ எடுத்திருப்பதாகவும் விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பிரேத பரிசோதனை மற்றும் அவரது அறையில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...