Newsதேர்தலை இலக்காகக் கொண்டு 3 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் 

தேர்தலை இலக்காகக் கொண்டு 3 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் 

-

வரும் வாரத்தில் குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்குப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் திட்டமிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கூட்டாட்சித் தேர்தலே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரதமரின் பயணம் குயின்ஸ்லாந்தில் தொடங்கி சன்ஷைன் கோஸ்ட், ராக்ஹாம்ப்டன், கெய்ர்ன்ஸ் மற்றும் மவுண்ட் இசா வரை நீட்டிக்கப்படும்.

அதன் பின்னர் வடமாகாணத்திற்குச் செல்லும் பிரதமர், கிம்பர்லி மற்றும் பேர்த் ஆகிய இடங்களுக்குச் சென்ற பின்னர் விஜயம் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Pre – Election Blitz-இன் கீழ், உள்கட்டமைப்பு, சுகாதாரத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி அமைப்பு ஆகியவற்றில் பிரதமர் பரந்த கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் அவுஸ்திரேலியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அல்லது அவுஸ்திரேலியாவை பின்னோக்கி கொண்டு செல்லும் என பிரதமர் Anthony Albanese மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...