NewsUK ETA விண்ணப்ப மோசடிகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

UK ETA விண்ணப்ப மோசடிகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

-

United Kingdom மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட Electronic Travel Authorisation (ETA) இற்கு விண்ணப்பிக்கும்போது கவனமாக இருக்குமாறு cyber crime நிபுணர்கள் ஆஸ்திரேலியர்களை எச்சரித்துள்ளனர்.

சைபர் குற்றவாளிகள் இந்த முறையை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்தப் புதிய முறை தொடர்பில் அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் அறியாமையே இணையக் குற்றவாளிகளால் பல்வேறு குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக cyber crime நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அனுமதிகளை விற்பனை செய்யும் 100 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வமற்ற போலி இணையத்தளங்களை சட்ட அமலாக்க முகவர் ஏற்கனவே கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் கிங்டமிற்குப் பயணிக்கத் தேவைப்படும் இந்த அனுமதியை UK ETA app அல்லது யுனைடெட் கிங்டமின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே பெற முடியும்.

உரிய அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு பணம் செலுத்தும் போது கவனமாக இருக்குமாறு சைபர் கிரைம் நிபுணர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...