Newsவிமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற...

விமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை

-

டிசெம்பர் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்த சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மெல்பேர்ன் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, உரிய நடவடிக்கைகள் முடியும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

41 வயதான அசங்க மெத்யூ என்ற இலங்கையர் இன்று மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் மொழி பெயர்ப்பாளர் மற்றும் இரண்டு ஆதரவாளர்களுடன் ஆஜரானார்.

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, டிசம்பர் 18ஆம் திகதி, சந்தேகத்திற்குரிய இலங்கையர் மெல்பேர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, அவர் மீது அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு. அசங்க மேத்யூ கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார் மற்றும் கடவுச்சீட்டை ஒப்படைத்தல், மாநிலம் அல்லது நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, வாரத்திற்கு மூன்று முறை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தல் மற்றும் வீட்டு ஊரடங்கு உத்தரவின் கீழ் வாழ்வது உள்ளிட்ட பல நிபந்தனைகளின் கீழ் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

Latest news

எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு விஷப் பொருளைத் தடை செய்யக் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு கொடிய நச்சுப் பொருளைத் தடை செய்யுமாறு நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Second-generation anticoagulant rodenticides (SGARs)...

ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள ஒரு புதிய சுற்றுச்சூழல் பிரச்சனை

ஆஸ்திரேலிய பூங்கா ஒன்றில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிழல் துணி , ஒரு கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தோட்டத்தில் தோண்டும்போது...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

NSW-வில் திடீரென காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கை – 7 பேர் கைது

இந்த வாரம் சிட்னி முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் காவல்துறையால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்டதாகக் கூறப்படும் Toyota Hilux காரை நேற்று...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...