Melbourneமெல்பேர்ணில் ஆவிகளை வைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

மெல்பேர்ணில் ஆவிகளை வைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

-

மெல்பேர்ணில் அமானுஸ்யமான கதைகளை கூறி வயதான பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய குழுவினர் குறித்த தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

இந்த குழுவில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர்கள் வயோதிபப் பெண்களை பின்தொடர்ந்து ‘ஆவிகள்’ வருவதாகவும், இதனால் அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் கூறி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பணம், நகைகள் அடங்கிய பையை வைத்து பூஜை செய்தால் ஆவியிடம் இருந்து விடுபடலாம் என்று கூறி முதியவர்களின் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணொருவரிடம் விசாரணை செய்தபோது, அந்த கும்பல் சிறிது நேரம் பையை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டு பையில் இருக்கும் தங்களுடைய பெறுமதியான பொருட்களை திருடுவதாக கூறினார்.

இந்தக் கும்பலிடம் 1,50,000 டாலர்களுக்கு மேல் ரொக்கம் மற்றும் நகைகளை மக்கள் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...