Melbourneமெல்பேர்ணில் ஆவிகளை வைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

மெல்பேர்ணில் ஆவிகளை வைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

-

மெல்பேர்ணில் அமானுஸ்யமான கதைகளை கூறி வயதான பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய குழுவினர் குறித்த தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

இந்த குழுவில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர்கள் வயோதிபப் பெண்களை பின்தொடர்ந்து ‘ஆவிகள்’ வருவதாகவும், இதனால் அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் கூறி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பணம், நகைகள் அடங்கிய பையை வைத்து பூஜை செய்தால் ஆவியிடம் இருந்து விடுபடலாம் என்று கூறி முதியவர்களின் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணொருவரிடம் விசாரணை செய்தபோது, அந்த கும்பல் சிறிது நேரம் பையை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டு பையில் இருக்கும் தங்களுடைய பெறுமதியான பொருட்களை திருடுவதாக கூறினார்.

இந்தக் கும்பலிடம் 1,50,000 டாலர்களுக்கு மேல் ரொக்கம் மற்றும் நகைகளை மக்கள் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...