Newsகட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு $10,000 உதவித்தொகை

கட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு $10,000 உதவித்தொகை

-

வரும் கூட்டாட்சித் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு 10,000 டாலர் உதவித்தொகை வழங்க ஆளும் தொழிலாளர் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த கொடுப்பனவு பல கால கட்டங்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, கட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தலா 6, 12, 24, 36 மாதங்களில் தலா 2,000 டாலர்கள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகையை அந்தந்த காலக்கெடு முடிந்ததும் செலுத்த ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு 626.9 மில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து வருட காலத்திற்குள் 1.2 மில்லியன் புதிய வீடுகளை கட்டுவதற்கு தொழிலாளர் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் பிரதமர் Anthony Albanese, தொழிற்பயிற்சி பெற்றவர்கள் ஏற்கனவே கணிசமான நிதி அழுத்தத்தில் இருப்பதாக மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...