Cinemaஇயக்குனராகும் 'லப்பர் பந்து' நாயகி

இயக்குனராகும் ‘லப்பர் பந்து’ நாயகி

-

‘லப்பர் பந்து’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை இயக்குனராக இருப்பதாகவும், அவரது முதல் படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் நடித்த ‘லப்பர் பந்து’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் வசூலிலும் சக்கை போட்டு போட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில், இந்த படத்தின் நாயகி ஆக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்தது. ஏற்கனவே ‘வதந்தி’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார் என்பதும், தற்போது அவர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிவதோடு, அந்த படத்தில் ஒரு கேரக்டரில் சஞ்சனா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக ஒரு கதையை எழுதி, அந்த கதைக்கான நாயகனே தேடிவந்த நிலையில், கவினிடம் அவர் சொன்ன கதை ஒர்கவுட் ஆகிவிட்டதாகவும், இதனை அடுத்து கவின் நடிக்கும் 9வது படத்தை சஞ்சனா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சஞ்சனா இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...