Breaking Newsஆஸ்திரேலிய மாநிலத்தில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

ஆஸ்திரேலிய மாநிலத்தில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

-

வடக்கு குயின்ஸ்லாந்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

டவுன்ஸ்வில்லியில் இருந்து 100km தொலைவில் SES மீட்புக் குழுவினர் சென்ற படகு மரத்தில் மோதி கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று குயின்ஸ்லாந்து பிரதமர் உறுதிப்படுத்தினார்.

படகில் இருந்த மற்ற 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் விரைவில் குறையாது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குயின்ஸ்லாந்தின் வடகிழக்கு கடற்கரையில் காற்றுடன் கூடிய கடுமையான பருவமழை எதிர்பார்க்கப்படும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக டவுன்ஸ்வில் மற்றும் இங்காம் குடியிருப்பாளர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சுமார் 6 மணித்தியாலங்களில் 160mm முதல் 250mm வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

க்ளோடன், ஹெர்மிட் பார்க், இடாலியா, ஒனுன்பா, ரயில்வே எஸ்டேட் மற்றும் ரோஸ்லியா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் காரணமாக உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 12 மணிக்குள் தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...