திறமையான ஆரம்பகால நிபுணர்களுக்கான மொபிலிட்டி ஏற்பாடு திட்டம் (MATES) எனப்படும் ஒரு புதிய முன்னோடித் திட்டம், இந்தியாவைச் சேர்ந்த இளம் நிபுணர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
இந்தத் திட்டம் இந்தியப் பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் நிபுணர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வரை வாழ்ந்து வேலை செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல் ஜனவரி 7 ஆம் திகதியுடன் முடிவடைந்தது, இப்போது சீரற்ற முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தொடர்புடைய கடிதங்கள் இப்போது அனுப்பப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் பெப்ரவரி 7, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் MATES விசாவிற்கு விண்ணப்பிப்பது கட்டாயமாகும்.
இந்த திகதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான துறைகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுரங்கம், பொறியியல், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம் மற்றும் விவசாய தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.
தகுதியான இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதாகவும், தகுதியான 3,000 இந்தியர்கள் இரண்டு ஆண்டுகள் நாட்டில் தங்கி படித்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் ஒன்றிலிருந்து தகுதிப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்றும், டிசம்பர் 9, 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.