Newsபணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

-

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் – இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 22ம் திகதி 6 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது.  ஆனால் திட்டமிட்டபடி அவர்களுக்கு ஈடாக இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பலஸ்தீன கைதிகளில் 650 பேரை விடுதலை செய்ய மறுத்துள்ளது. வரும் மார்ச் 1 ஆம் திகதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்

“ஹமாஸின் தொடர்ச்சியான மீறல்களைக் கருத்தில் கொண்டு நமது பணயக்கைதிகளை அவமதிக்கும் அவமானகரமான விழாக்கள் மற்றும் பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக இழிவாகப் பயன்படுத்துவதன் காரணமாக கடந்த 22ம் திகதி திட்டமிடப்பட்ட பலஸ்தீன கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று 6 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படும்போது அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்ட காட்சி வைரலானதை தொடர்ந்து இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி வருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நயீம் தெரிவித்தார்.

 இது தொடர்பாக அவர் கூறுகையில், “போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100  பலஸ்தீனர்களைக் கொன்றது.

இதுபோன்று தொடர்ந்து வரும் செயல்கள் ஒப்பந்தத்தை முறிக்கவும், மீண்டும் போருக்குத் திரும்புவதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு மோசமான தந்திரம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Latest news

Pentagon-இன் பெயரை மாற்ற டிரம்ப் முடிவு

அமெரிக்க பாதுகாப்புத் துறையை "Department of War" என்று மறுபெயரிடுவதற்கான நிர்வாக உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இரண்டாம் உலகப் போர் முடியும் வரை, நாட்டின் பாதுகாப்புத்...

March for Australia ஒரு தவறான புரிதல் – பேராசிரியர்கள்

March for Australiaபு ஒரு தவறான புரிதல் என்று Kaldor சர்வதேச அகதிகள் சட்ட மையத்தின் பேராசிரியர் ஜேன் மெக்காடம் கூறுகிறார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு,...

விபரீத பாலியல் ஆசை காரணமாக தனது கால்களை தானே துண்டித்துக் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்

பிரபல பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், Sepsis நோயால் தனது கால்களை இழந்துவிட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்து காப்பீட்டு இழப்பீடு பெற மோசடியாக முயன்றதற்காக சிறைத்தண்டனை...

உலகின் முதல் டிரில்லியனராக மாற தயாராக உள்ள எலோன் மஸ்க்

Tesla நிறுவனர் எலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை Tesla வெளியிட்ட ஆவணத்தின்படி, அவரது மின்சார கார் நிறுவனம் அடுத்த 10...

உலகின் முதல் டிரில்லியனராக மாற தயாராக உள்ள எலோன் மஸ்க்

Tesla நிறுவனர் எலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை Tesla வெளியிட்ட ஆவணத்தின்படி, அவரது மின்சார கார் நிறுவனம் அடுத்த 10...

சிட்னியில் சுறா தாக்குதலால் உயிரிழந்த ஒரு குழந்தையின் தந்தை

சிட்னியில் உள்ள பிரபலமான கடற்கரையில் ஒரு பெரிய சுறா தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தாக்குதல் நேற்று காலை சுமார் 10 மணியளவில் Dee Why-இல்...