தாய்லாந்து – மியன்மார் எல்லையில் இணையத்தள மோசடி மையங்களில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், முகவர்களால் ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அவ்வாறு தாய்லாந்து – மியன்மார் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இணையத்தள பணமோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதோடு இந்த மோசடி மையங்களை சீன நிறுவனங்கள் நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை மியன்மார், கம்போடியா, லாவோஸில் உள்ள மோசடி மையங்களில் வேலை செய்த இவர்கள், காதலித்து ஏமாற்றி பணம் பெறுவது , சட்டவிரோத சூதாட்டம் என பல வழிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் மோசடியில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.