Newsமிகப்பெரிய மென்பொருள் மாற்றத்திற்கு தயாராகும் ஆப்பிள்

மிகப்பெரிய மென்பொருள் மாற்றத்திற்கு தயாராகும் ஆப்பிள்

-

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

iOS 19, iPadOS 19 (“Luck”) மற்றும் macOS 16 (“Cheer”) ஆகியவை இம்முறையில் வெளிவரும் புதிய பதிப்புகளாகும்.

இந்த புதுப்பிப்பு, சாதனங்களின் மென்பொருள் வடிவமைப்பை ஒருங்கிணைத்து, பயன்பாட்டை எளிதாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அப்டேட்டில் கொன்கள், மெனுக்கள், செயலிகள் மற்றும் கட்டுப்பாடு அமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.

இது விஷன் ப்ரோ Vision Pro மென்பொருளின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

இந்த மாற்றம், ஜூன் மாதம் நடைபெறும் எனவும் Apple Worldwide Developers Conference (WWDC) நிகழ்ச்சியில் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிளின் முக்கிய வருவாய் ஆதாரமான iPhone விற்பனை குறைந்துள்ளதால், இந்த புதுப்பிப்புகள் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதிலும் சுமார் இரண்டு பில்லியன் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய மென்பொருள் மாற்றம் தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...