சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா சரக்கு விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது.
TP1000 எனப்படும் ஆளில்லா சரக்கு விமானம், ஷான்டாங் மாகாணத்தில் தனது முதல் விமானத்தை வெற்றிகரமாக ஏவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆளில்லா பெரிய அளவிலான போக்குவரத்து விமானமாகும், இது வானிலிருந்து பொருட்களை வழங்க முடியும்.
ட்ரோன்கள் பறப்பதற்கான தரநிலைகளுக்கு இணங்க, முற்றிலும் சுதந்திரமான ஆராய்ச்சி மூலம் சீனா இந்த விமானத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானம் ஒரு டன் வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இந்த விமானம் முழு சுமையில் 1,000 கிலோமீட்டர் பயணிக்கும் திறன் கொண்டது.
TP1000 விமானம் அடுத்த ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.