Newsஇத்தாலி கடற்பரப்பில் படகு விபத்து - 6 பேர் பலி

இத்தாலி கடற்பரப்பில் படகு விபத்து – 6 பேர் பலி

-

இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

டியூனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் துறைமுகத்திலிருந்து 56 அகதிகள் இறப்பர் படகில் மார்ச்17 அன்று பயணம் மேற்கொண்டிருந்தனர். பயணம் தொடங்கிய சில மணி நேரங்களில் அந்த படகில் ஓட்டை விழுந்து காற்று வெளியேறத் தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடுக்கடலில் தத்தளித்த 4 பெண்கள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டு இத்தாலியின் தெற்கு பகுதியிலுள்ள லான்பெதூஸா தீவிற்கு அழைத்து வரப்பட்டு ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையகத்தின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாயமான 46 அகதிகளில் 6 பேரது உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 40 பேரது நிலைகுறித்து எந்தவொரு தகவலும் தெரியவராத சூழலில் அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

திரும்பப் பெறப்படும் Coles-இல் விற்கப்பட்ட பல பிரபலமான தயாரிப்புகள்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பல வகையான கீரை வகைகளை திரும்பப் பெற Coles நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை Coles-இல் விற்கப்பட்ட...

விலையை உயர்த்தும் பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பல்பொருள் அங்காடிகள் விலையை உயர்த்துவதற்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று (30) அறிவித்தார். அது கான்பெராவில் அவரது தேர்தல்...

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு குயின்ஸ்லாந்தைத் தாக்கிய மிக மோசமான வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைப் பாதிக்கும் வெள்ள நிலைமையானது ஆபத்தான நிலையை எட்டுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, மாநிலத்திற்கு வெளியே உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான...

பிரதமர் அல்பானீஸ் மற்றும் பீட்டர் டட்டனுக்கு சிறப்பு பாதுகாப்பு

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஐந்து...

பிரதமர் அல்பானீஸ் மற்றும் பீட்டர் டட்டனுக்கு சிறப்பு பாதுகாப்பு

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஐந்து...

கோகைன் போதைப்பொருளில் விலையில் ஆஸ்திரேலியா மூன்றாமிடம்

கோகோயினின் மதிப்பைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் (UNODC) தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி,...