Newsஆஸ்திரேலியாவில் பரவும் புதிய நோய் - சுகாதார அவசரநிலை அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பரவும் புதிய நோய் – சுகாதார அவசரநிலை அறிவிப்பு

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயினால் அரசு சுகாதார அவசரநிலை அறிவித்துள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 5 பேருக்கு Legionnaires எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் 5 பேரும் சிட்னியின் மத்திய வர்த்தக மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவக்கும் கடந்த மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரையிலான காலக்கட்டத்தில் இந்நோயிக்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொற்று பரவியதற்கான மூலக்காரணம் என்னவென்று தெரியவராத நிலையில் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, Legionnaires என்பது Legionella எனும் நன்னீரில் வாழும் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு வகையான நிமோனியா காய்ச்சலாகும். இந்த பாக்டீரியாக்கல் மனித உடம்பினுள் சென்ற 2 – 10 நாள்களுக்குள் தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்ட துவங்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், காற்றில் பரவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5-10 சதவிகிதம் உயிரிழக்கும் அபாயமுள்ளதெனவும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என்றால் 80 சதவிகிதம் வரையில் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு விஷப் பொருளைத் தடை செய்யக் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு கொடிய நச்சுப் பொருளைத் தடை செய்யுமாறு நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Second-generation anticoagulant rodenticides (SGARs)...

ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள ஒரு புதிய சுற்றுச்சூழல் பிரச்சனை

ஆஸ்திரேலிய பூங்கா ஒன்றில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிழல் துணி , ஒரு கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தோட்டத்தில் தோண்டும்போது...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

NSW-வில் திடீரென காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கை – 7 பேர் கைது

இந்த வாரம் சிட்னி முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் காவல்துறையால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்டதாகக் கூறப்படும் Toyota Hilux காரை நேற்று...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...